சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இலங்கையில் மூத்த துறவி கைது

இலங்கையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், புகழ்பெற்ற கோயிலின் மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இலங்கையில் மூத்த துறவி கைது

இலங்கையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், மூத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பல்லேகம ஹேமரத்னா (71) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், இலங்கையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலின் முதன்மை துறவியாக பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை விசாரணையில், பாதிக்கப்பட்டவர் 15 வயதுடைய சிறுமி என்றும், அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதாகவும், குழந்தைக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் நடுவர் நீதிமன்றம், பல்லேகம ஹேமரத்னா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.

அதன்பேரில், அவர்கள் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.