சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இலங்கையில் மூத்த துறவி கைது
இலங்கையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், புகழ்பெற்ற கோயிலின் மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், மூத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பல்லேகம ஹேமரத்னா (71) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், இலங்கையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலின் முதன்மை துறவியாக பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை விசாரணையில், பாதிக்கப்பட்டவர் 15 வயதுடைய சிறுமி என்றும், அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதாகவும், குழந்தைக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் நடுவர் நீதிமன்றம், பல்லேகம ஹேமரத்னா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.
அதன்பேரில், அவர்கள் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Dhiyanesh May 4, 2026 0 7
Dhiyanesh May 9, 2026 0 1
இலங்கையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில்,...
Prasanth Subramani Apr 29, 2026 0 6
உலக பூமி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் நிலைத்த காலநிலை நடவடிக்கை குறித்து இரண்டு...
Dhiyanesh May 7, 2026 0 3
108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவை ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்பது குறித்து ஆளுநர்...
Prasanth Subramani May 7, 2026 0 2
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
Dhiyanesh May 6, 2026 0 2
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை...
Prasanth Subramani May 7, 2026 0 2
ஐபிஎல் 2026 போட்டியில் ஹைதராபாத் அணி 235 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை 33 ரன்கள்...
Prasanth Subramani May 7, 2026 0 2
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன....
Prasanth Subramani May 5, 2026 0 5
நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் பரவி 3 பேர் உயிரிழந்துள்ளனர்....
Prasanth Subramani Apr 29, 2026 0 4
2025 ஆம் ஆண்டில் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.1.89 லட்சம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது....
Prasanth Subramani Apr 30, 2026 0 3
ஹோர்முஸ் நீரிணையை “டிரம்ப் நீரிணை” என பெயர்மாற்றம் செய்து வரைபடம் வெளியிட்டதாக அமெரிக்க...