மே 7ல் புதிய பாஜக அமைச்சரவை பதவியேற்பு: பிகார் அரசியலில் புதிய கட்டம்

பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான புதிய பாஜக அமைச்சரவை மே 7 அன்று பதவியேற்க உள்ளது. விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

மே 7ல் புதிய பாஜக அமைச்சரவை பதவியேற்பு: பிகார் அரசியலில் புதிய கட்டம்

சாம்ராட் சௌதரி தலைமையிலான புதிய பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவை வரும் மே 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பின்னர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முதல்முறையாக சாம்ராட் சௌதரி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பிகார் முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் பிகார் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கம், பிகார் மாநில அரசியலில் அடுத்த கட்ட நிர்வாக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.